Virudhunagar: நிலம் ஆக்கிரமிப்பு.. அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலம்.. விருதுநகரில் விவசாயிகள் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Virudhunagar: நிலம் ஆக்கிரமிப்பு.. அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலம்.. விருதுநகரில் விவசாயிகள் கைது!

Virudhunagar: நிலம் ஆக்கிரமிப்பு.. அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலம்.. விருதுநகரில் விவசாயிகள் கைது!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 12, 2025 01:56 PM IST

ஏற்கனவே இந்த பிரச்சினை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களிடம் ஒரு வருடத்திற்கு முன்பு மனுக் கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை மனு கொடுக்கப்பட்டது. அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Virudhunagar: நிலம் ஆக்கிரமிப்பு.. அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலம்.. விருதுநகரில் விவசாயிகள் கைது!
Virudhunagar: நிலம் ஆக்கிரமிப்பு.. அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலம்.. விருதுநகரில் விவசாயிகள் கைது!

ஆக்கிரமிப்பு அகற்ற உறுதியளித்த நிர்வாகம்

லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் கம்பெனி, மாவட்ட ஆட்சியரை அணுகி ஆக்கிரமிப்பு இல்லை என்று ஒரு கடிதத்தை ஏதோ ஒரு வகையில் பெற்றுள்ளனர். அதன் பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை நியமித்து புலத் தணிக்கை செய்ய உத்தரவிட்டார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு உள்ளது என்று உறுதி செய்ததாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றலாம் என்று கூறி இருந்தாராம்.

மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்
மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்

அதன் பிறகு எந்த விதமான நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியர் எடுக்கவில்லை. ஏற்கனவே இந்த பிரச்சினை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களிடம் ஒரு வருடத்திற்கு முன்பு மனுக் கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை மனு கொடுக்கப்பட்டது. அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அறிவித்தபடி போராட்டம் முன்னெடுப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற முடியாத மாவட்ட ஆட்சியர் அவர்களும் வருவாய்த் துறை அமைச்சர் அவர்களும் பதவி விலகக் கோரி இன்று விவசாயிகள் அமைச்சர் வீட்டு முன்பு 12-4-2025 காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்கள்.

அதன் படி, இன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் விருதுநகர் மேம்பாலம் அருகில் இருந்து அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். காவல்துறை புறப்பட்ட இடத்திலேயே ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் விருதுநகர் உழவர் சந்தை அருகில் லெட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.

தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்த முடிவு

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் சென்னை தலைமைச் செயலகம் சென்று போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளார்கள். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ ஏ. நாராயண சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு சங்கம் தலைவர் பி பி ராமமூர்த்தி, முன்னாள் ராணுவத்தினர் சங்கத் தலைவர் கேசவராஜன், இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், தமிழ் விவசாயிகள் சங்கம் பொருளாளர் கவலூர் சுப்பாராஜ் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.