Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!

Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 09, 2025 12:05 PM IST

‘‘தொடர்ந்து வறட்சியை மட்டுமே சந்தித்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தில், இதுபோன்று மடைகள் பயனற்று கிடந்தால் விவசாயம் எப்படி செழிக்கும்,’’

Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!
Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!
பெருவயல் கண்மாயில் ஆய்வு நடத்திய விவசாயிகள்
பெருவயல் கண்மாயில் ஆய்வு நடத்திய விவசாயிகள்

ஆய்வு: பெருவயல் கண்மாய்- பத்து மடை

1)மூலக்கரை மடை

2) கரைமேல் குடியிருப்பு மடை.

3) பெரிய படை.

4) மண்ணக்காரர் மடை.

5) பாலச்சி மடை

6) பிள்ளையார் கோயில் மடை.

7) குமிழி மடை.

8)நரியன்மடை

9)தொட்டி மடை.

10) திடக்கோட்டை மடை.

பெருவயல் மடைப் பகுதிய சேதமடைந்துள்ளது
பெருவயல் மடைப் பகுதிய சேதமடைந்துள்ளது

ஆக்கிரமிப்பும்.. சிதைந்து போன கலுங்கும்

5000 ஏக்கருக்கு மேல் நிலம் பாசன வசதி பெறும் இந்தக் கண்மாய்க்கு வைகைத் தண்ணீர் வரத்துக் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேறும் கலுங்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது முழுவதுமாக இடிந்து விழுந்து சிதைந்து போய் கிடக்கிறது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், ‘‘தொடர்ந்து வறட்சியை மட்டுமே சந்தித்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தில், இதுபோன்று மடைகள் பயனற்று கிடந்தால் விவசாயம் எப்படி செழிக்கும்,’’ என்றும் கேள்வி எழுப்பினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் கண்மாய் மடையின் சேதமடைந்த ஒரு பகுதி
ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் கண்மாய் மடையின் சேதமடைந்த ஒரு பகுதி