Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக FACT CRESCENDO செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயில் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக FACT CRESCENDO செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சாவியை கண்டுபிடிக்கவே தியானம்! மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகன்நாதர் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார் – தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன?
ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் கருவூல சாவி தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டது என்று சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியிருந்தார். இந்தச் சூழலில் கன்னியாகுமரியில் மூன்று நாள் தியானம் மேற்கொள்ள மோடி வருகிறார். இந்த இரண்டையும் இணைத்து அண்ணாமலை கூறியது போன்று போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
