Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Published Dec 17, 2024 03:11 PM IST

2025 ஜனவரி அல்லது பிப்வரவரி மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்.

Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?
Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்

வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார்.

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணத்தை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்வரவரி மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.