Erode East By-Election: ஈரோடு கிழக்கில் இடைத் தேர்தல் எப்போது? தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
Erode East By-Election: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர் ஆளுநர் உரைக்காக நேற்று தொங்கி உள்ளது. இரண்டாம் நாளான இன்று மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

Erode East By-Election: ஈரோடு கிழக்கில் இடைத் தேர்தல் எப்போது? தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.