Erode East ByElection: ஈரோடு இடைத்தேர்தல்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Byelection: ஈரோடு இடைத்தேர்தல்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்!

Erode East ByElection: ஈரோடு இடைத்தேர்தல்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்!

Kathiravan V HT Tamil
Jan 21, 2025 10:48 AM IST

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

Erode East ByElection: ஈரோடு இடைத்தேர்தல்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்!
Erode East ByElection: ஈரோடு இடைத்தேர்தல்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்!

ஈரோடு கிழக்கு தொகுதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி நிறைவு பெற்று உள்ளது. 

46 பேர் போட்டி

வேட்புமனு பரிசீலனையில் திமுக சார்பில் சந்திரக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 55 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. 5 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. நேற்றுடன் (ஜனவரி 20) வேட்புமனுக்களை திரும்ப பெற கால அவகாசம் நிறைவு பெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் போட்டியிடுகின்றனர்.

நேற்று நீக்கம்! இன்று மறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதியில், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் செந்தில் முருகன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். இதனால் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  இந்த நிலையில் நேற்று தனது வேட்புமனுவையும் செந்தில் முருகன் வாபஸ் பெற்று இருந்தார். இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்தார். 

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.