Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!

Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!

Kathiravan V HT Tamil
Feb 03, 2025 05:55 PM IST

திமுக, நாம் தமிழர் கட்சிகளை தவிர வேறு பிரதான கட்சிகள் போட்டியிடாததால் ஈரோடு கிழக்கில் பெரிய அளவுக்கு பிரச்சாரம் நடக்கவில்லை. திமுக சார்பில் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!
Erode: நாளை மறுநாள் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது! ஆர்வம் காட்டாத திமுக! கச்சை கட்டிய நாதக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.. 

இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20ஆம் தேதி நிறைவடைந்தது, 21ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பதிவான வாக்குகள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

பரப்புரையில் ஆர்வம் காட்டாத திமுக

இந்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று மாலை உடன் பிரச்சாரம் ஓய்ந்து உள்ளது. திமுக, நாம் தமிழர் கட்சிகளை தவிர வேறு பிரதான கட்சிகள் போட்டியிடாததால் ஈரோடு கிழக்கில் பெரிய அளவுக்கு பிரச்சாரம் நடக்கவில்லை. திமுக சார்பில் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் யாரும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்க வில்லை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டங்கள் நடத்தி வாக்குகளை சேகரித்தார். 

இன்று மாலை 6 மணி உடன் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ளது. தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாளைய தினம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதியும் இடைத்தேர்தல்களும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்

வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதை அடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.