வலுவான கூட்டணி அமையும்!திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு
கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம், வலுவான கூட்டணி அமையும். தொடர்ச்சியாக கட்சி பணிகளில் நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வலுவான கூட்டணி அமையும்!திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2026க்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். அதன் ஒரு பகுதியாக பூத் கமிட்டியை வலுப்படுத்தக்கூடிய பணிகளை அதிமுக தீவிரபடுத்தியுள்ளது .
மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுக்கு உத்தரவு
மாவட்ட வாரியாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை அமைத்து அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.