’கும்பகோணம் மாநகராட்சிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’கும்பகோணம் மாநகராட்சிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

’கும்பகோணம் மாநகராட்சிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Published Jun 27, 2025 02:43 PM IST

”வரி வசூலிக்கும் அளவிற்கு அடிப்படை வசதிகளை இந்த திமுக அரசு நிறைவேற்றியுள்ளதா என கும்பகோணம் மக்கள் ஏமாற்றத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர் என விமர்சனம்”

’கும்பகோணம் மாநகராட்சிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
’கும்பகோணம் மாநகராட்சிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் 'மாடல் ஆட்சி'யின் நிர்வாகத் திறமையின்மையைக் கண்டித்தும், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைக் கண்டித்தும், வரும் ஜூலை 4, வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு கும்பகோணம், காந்தி பூங்கா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியான கும்பகோணம்: வசதிகள் இன்றி வரிச்சுமை அதிகரிப்பு

ஆட்சிக்கு வந்தவுடன், 2021 ஆம் ஆண்டு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தது திமுக அரசு. ஏற்கனவே அதிக சொத்து வரி செலுத்தி வந்த மக்களுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல், வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளது திமுக அரசு. வரி வசூலிக்கும் அளவிற்கு அடிப்படை வசதிகளை இந்த திமுக அரசு நிறைவேற்றியுள்ளதா என கும்பகோணம் மக்கள் ஏமாற்றத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள்

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

  • பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன.
  • மாநகரம் முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன.
  • வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • அம்மா உணவகங்களை பராமரிப்பதற்குப் போதுமான நிதியை ஒதுக்காததால், **நம்பி இருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை பராமரிப்பின்றி உள்ளது, பம்பிங் செக்சன்கள் சரியாகச் செயல்படவில்லை.
  • 80 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 30 பேர் மட்டுமே பணிபுரிவதால், பராமரிப்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
  • சாக்கடை நீர் சாலைகளில் ஓடுவதால் சுகாதாரச் சீர்கேடு பெருகியுள்ளது, கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  • தாராசுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.
  • கும்பகோணம் மாநகராட்சி பள்ளி கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன, எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. சுமார் ஒரு கோடி ரூபாய் கல்வி நிதி எங்கே சென்றது என்று மக்கள் திகைக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.