டாஸ்மாக் முறைகேடு: ’ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!’ புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்
ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை," என்று ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாஸ்மாக் முறைகேடு: ’ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!’ புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்
டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.