EPS: டாஸ்மாக்கில் கள்ளச்சாராய விற்பனை.. திமுகவினர் என்றால் கொம்பு முளைத்தவர்களா?.. ஈபிஎஸ் கடும் கோபம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: டாஸ்மாக்கில் கள்ளச்சாராய விற்பனை.. திமுகவினர் என்றால் கொம்பு முளைத்தவர்களா?.. ஈபிஎஸ் கடும் கோபம்!

EPS: டாஸ்மாக்கில் கள்ளச்சாராய விற்பனை.. திமுகவினர் என்றால் கொம்பு முளைத்தவர்களா?.. ஈபிஎஸ் கடும் கோபம்!

Karthikeyan S HT Tamil
Feb 05, 2025 12:25 PM IST

EPS: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்கில் கள்ளச்சாராய விற்பனை.. திமுகவினர் என்றால் கொம்பு முளைத்தவர்களா?.. ஈபிஎஸ் கடும் கோபம்!
டாஸ்மாக்கில் கள்ளச்சாராய விற்பனை.. திமுகவினர் என்றால் கொம்பு முளைத்தவர்களா?.. ஈபிஎஸ் கடும் கோபம்!

இதுதொடர்பாக இன்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? "போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.

காவல்துறை கண்டுகொள்ளாதா?..

போதாக்குறைக்கு, "திமுக கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?.. தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்." என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக செய்தி வெளியாகியது. இதையடுத்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அனுமதியின்றி பார் நடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆத்தூர் அருகே ரயிலடியில் பார் நடத்தி வந்த கருணாநிதி, ஆனந்த், ராமசாமி மற்றும் செல்லதுரை ஆகியோரை கைது செய்தனர். ஆத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பார்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனை என பொய்யான தகவலுடன் வீடியோ பரப்பியவர் உள்பட 2 பேர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.