’பரோட்டா கடை முதல் பேன்சி ஸ்டோர் வரை வணிகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது!’ ஈபிஎஸ் கடும் தாக்கு!
“சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து அதிமுக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது, ஆனால் ஆதரவாக திமுக வாக்களித்ததை ஈபிஎஸ் நினைவுக்கூர்ந்தார்”

’பரோட்டா கடை முதல் பேன்சி ஸ்டோர் வரை வணிகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது!’ ஈபிஎஸ் கடும் தாக்கு!
’திமுக ஆட்சியில் வணிகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துவிட்டது’ என வணிகர் சங்க நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
மறைமலைநகரில் மாநாடு
மறைமலை நகரில் கொளத்தூர் ரவி தலைமையில் நடந்த தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவையின் 42-வது வணிகர் தின விழா மற்றும் வணிக பாதுகாப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், வணிகர்களின் நலனைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வாக்குறுதி அளித்தார்.