கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற ED
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற Ed

கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற ED

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 04:34 PM IST

இதனைத் தொடர்ந்து, விசாகனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது.

கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற ED
கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற ED

மணப்பாக்கத்தில் ரெய்டு 

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று (மே 16, 2025) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது, விசாகனின் வீட்டருகே வாட்ஸ்அப் உரையாடல் நகல்கள் கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, விசாகனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது.

நுங்கம்பாக்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்

சோதனையின்போது விசாகனின் மனைவி மற்றும் மகன் வீட்டில் இருந்தனர். எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாகவும், விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் மேலும் விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல் நகல்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.