சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!

சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!

Kathiravan V HT Tamil
Published May 06, 2025 09:46 AM IST

விருகம்பாக்கம் காவேரி தெருவில் உள்ள பாண்டியனின் இல்லத்தில் 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிவு உள்ளது.

சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!

சென்னையில் விருகம்பாக்கம், சாலிகிராமம், டி.நகர், அசோக் நகர், ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகள் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான முறைகேடு புகார்களின் அடிப்படையில் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சோதனை நடைபெறும் இடங்கள் மற்றும் நிறுவனங்கள்

அசோக் நகரில் உள்ள என்.சி.எஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குநராக உள்ள ஏ.கே.நாதனின் கோட்டூர்புரம் இல்லம், 360 பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோயம்பேடு ஜெயநகரில் உள்ள எக்கோ கேர் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குணசேகரனின் இல்லம், கே.கே.நகரில் மருத்துவர் வரதராஜனின் இல்லம், மற்றும் விருகம்பாக்கம் காவேரி தெருவில் பாண்டியனின் இல்லம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடைபெறுகின்றன. மருத்துவர் வரதராஜன் தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் தொழிலில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் மீதான புகார்கள்

விருகம்பாக்கம் காவேரி தெருவில் உள்ள பாண்டியனின் இல்லத்தில் 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிவு உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பணியில் இருந்தபோது பன்மடங்கு சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2021 ஜனவரி 14 அன்று அவரது இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அப்போது 1.38 கோடி ரூபாய் பணம், 3 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி, வைரம் மற்றும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது மீண்டும் அவரது இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனையின் எதிர்பார்ப்பு

இந்த சோதனைகள் மேலும் விரிவடையக்கூடும் எனவும், முழுமையான சோதனைக்குப் பின்னர் முறைகேடுகள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் எனவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகள் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.