Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்?’ அமலாக்கத்துறை பதில் மனுவில் புதிய தகவல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji Vs Ed: ’செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்?’ அமலாக்கத்துறை பதில் மனுவில் புதிய தகவல்!

Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்?’ அமலாக்கத்துறை பதில் மனுவில் புதிய தகவல்!

Kathiravan V HT Tamil
Published Jun 25, 2023 05:20 PM IST

”செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவரை சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கவில்லை என்றும் அவரது கைது நியாமானது” அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை

அமலாக்கத்துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் மீதான கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் செந்தில் பாலாஜியை கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவருக்கு உரிய மெமோ கொடுத்தோம் ஆனால் அதனை வாங்கவில்லை. அவரை கைது செய்யும் முன்னர் அது குறித்து செல்போன் குறுஞ்செய்தி மூலமும் மின்னஞ்சல் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவரை சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கவில்லை என்றும் அவரது கைது நியாமானது என்றும் கூறி உள்ள அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்தால்தான் அவரை கைது செய்ததாகவும் பதில் மனுவில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாலேயே அவரது கைது கட்டாயமானதாகவும் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பறிமாற்றம் செய்ததற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கூறி உள்ள அமலாக்கத்துறை இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரை காவிலில் எடுத்து விசாரிக்க என்றும் எதிர்காலத்தில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் அமலாக்கத்துறை தனது பதில் மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.