Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜி வழக்கை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துகிறது!’ அமலாக்கத்துறை சரமாரி குற்றச்சாட்டு!
Senthil Balaji Vs ED: அமலாக்கத்துறை வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முந்தைய வழக்குகளை விசாரணைக்கு எடுக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதே கேள்விக்கு உரியதாக உள்ளது என கூறி உள்ளனர்.

Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜி வழக்கை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துகிறது!’ அமலாக்கத்துறை சரமாரி குற்றச்சாட்டு!
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
இந்த வழக்கு விசாரணை, ஆனது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.