‘செங்கோட்டையனை பேச விடுங்க..’ சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘செங்கோட்டையனை பேச விடுங்க..’ சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!

‘செங்கோட்டையனை பேச விடுங்க..’ சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 18, 2025 12:47 PM IST

சட்டமன்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்குமாறு, சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்த சம்பவம், அவர்களை சுற்றி நிகழ்ந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

‘செங்கோட்டையனை பேச விடுங்க..’ சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!
‘செங்கோட்டையனை பேச விடுங்க..’ சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!

இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பதிலளித்தனர். குறிப்பாக, அன்பில் மகேஷ் பேசும் போது, ‘கடந்த ஆட்சியில் தான் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும். இதுவரை 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அதிக நிதி ஒதுக்கி வருவதாகவும், அதிமுக ஆட்சியில் புதிதாக எதுவும் செய்யவில்லை என்றும், பள்ளி கல்வித்துறையில் அதிமுக விட்டுச் சென்ற பல பணிகளை நாங்கள் தான் செய்தோம் என்றும், அறிவித்து தொடங்காத பணிகளை கூட நாங்கள் தான் செய்தோம்’ என்று அன்பில் மகேஷ் பதிலளித்தார். 

அதை கவனித்த முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அவருக்கு பதிலளிக்க அனுமதி கேட்டு சபாநாயகரை நோக்கி தனது கையை உயர்த்தி பலமுறை அனுமதி கேட்டார். ஆனால், சபாநாயகர் அதை கண்டுகொள்ளவில்லை. இதை கவனித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘செங்கோட்டையனுக்கு பேச வாய்ப்பளியுங்கள், அவர் பதிலளிப்பார்’ என்று மூன்று முறை சபாநாயகரிடம் முறையிட்டார். 

ஆனால், செங்கோட்டையன் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. செங்கோட்டையன்- இபிஎஸ் இடையே மனஸ்தாபம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், செங்கோட்டையனுக்காக எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் பரிந்துரை செய்ததும், அவரை பேச வைக்க முயற்சித்ததும், அவர்களுக்குள் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.