MRF தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!
”இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

MRF தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!
திருத்தணி அருகே உள்ள எம்.ஆர்.எஃப் தொழிற்சாலைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதிமுகவினர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தனியார் டயர் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நுழைவாயில் கூட்டம் நடத்த சென்ற அதிமுகவினர் செய்யப்பட்டனர். அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கமலகண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.ஹரி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தைக்காகச் சென்றபோது, அரக்கோணம் தாலுக்கா காவல்துறையினர் அவர்களை வழிமறித்து கைது செய்தனர்.