MRF தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mrf தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!

MRF தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Published May 05, 2025 11:24 AM IST

”இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

MRF தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!
MRF தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்! அதிமுக எம்.எல்.ஏ கைது! திமுகவை விளாசும் ஈபிஎஸ்!

அதிமுகவினர் கைது 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தனியார் டயர் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நுழைவாயில் கூட்டம் நடத்த சென்ற அதிமுகவினர் செய்யப்பட்டனர். அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கமலகண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.ஹரி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தைக்காகச் சென்றபோது, அரக்கோணம் தாலுக்கா காவல்துறையினர் அவர்களை வழிமறித்து கைது செய்தனர்.

எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் போராட்டம் 

எம்ஆர்எப் தொழிற்சாலையில் 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 28 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சு. இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கோ. அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக மு.க.ஸ்டாலின் மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார்.