‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!
‘நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பி இருந்தால் திமுக படுபாதாளத்துக்கு சென்று இருக்கும். கேள்வி கேட்டதையும் நேரலையில் செய்ய வேண்டும், பதிலையும் நேரலை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வப்போது பேட்டி கொடுத்தால் தான் சரியாக இருக்கும்’

‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் 4 ஆண்டு ஆட்சியை கடுமையாக விமர்சிததார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
சட்டம் ஒழுங்கு கெட்டு நாசமாகிவிட்டது
‘‘ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்து வரும் கட்சி அதிமுக. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இதுவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது . எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி, வன்கொடுமை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு நாடு நாசமாகிவிட்டது, ஆனால் அமைச்சர் ரகுபதி ஏதேதோ பேசுகிறார்.