‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!

‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 08, 2025 02:27 PM IST

‘நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பி இருந்தால் திமுக படுபாதாளத்துக்கு சென்று இருக்கும். கேள்வி கேட்டதையும் நேரலையில் செய்ய வேண்டும், பதிலையும் நேரலை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வப்போது பேட்டி கொடுத்தால் தான் சரியாக இருக்கும்’

‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!
‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!

சட்டம் ஒழுங்கு கெட்டு நாசமாகிவிட்டது

‘‘ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்து வரும் கட்சி அதிமுக. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று இதுவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது . எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி, வன்கொடுமை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு நாடு நாசமாகிவிட்டது, ஆனால் அமைச்சர் ரகுபதி ஏதேதோ பேசுகிறார்.

இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு பெண்மணி காவல் நிலையத்தில் இரண்டு சக்கர வாகனம் காணவில்லை என புகார் கொடுக்கிறார் . ஒரு காவலர் கண்டுபிடித்து விட்டதாக கூறி அழைக்கிறார் அந்த பெண்ணும் செல்கிறார். இதற்கு 15 ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், ஒரு சிறு தொகை தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். எப்படி அந்த காவலர் நடந்து கொண்டார் என அந்தப் பெண் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். இனி இப்படிப்பட்ட பிரச்சனை நடக்கக்கூடாது.

அதிமுக ஆட்சியில் சிறந்து விளங்கிய துறைகள்

இனியாவது இப்படிப்பட்ட துயர சம்பவம் நடக்கக்கூடாது. பொதுமக்கள் இது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். முதலமைச்சரும் சட்டத்துறை அமைச்சரும் வீணாக பழி சுமத்துகிறார்கள் என கூறுகிறார்கள். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நான் உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்தபோது தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெற்று தர வேண்டும் என தெரிவித்து இருந்தேன்.

அனைத்து கோரிக்கை மனுவும் கொடுத்தேன். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கெடுக்கிறார். திட்டத்திற்கு நிதி ஒதுக்கி கொடுத்திருக்கிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வெளியிட்டு இருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக தமிழக மக்களுக்கு தேவையானதை செய்து தர உறுதுணையாக இருப்போம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது எல்லாத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டது. அந்தந்த நேரத்திற்கு ஏற்ப அந்தந்த துறைகளில் கவனத்தை செலுத்தி செயல்பட்டோம்.

தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன?

திமுகவினர் மக்களை பற்றி கவனம் செலுத்துவது இல்லை வீட்டு மக்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். முதலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டது .இன்னும் ஒன்பது மாத காலத்துக்குள் இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும். திமுக தேர்தல் அறிக்கையில் இன்றைய முதலமைச்சர் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேர்தல் அறிக்கையில் அரசு காலி பணியிடங்கள் மூன்றரை லட்சம், அரசு சார்ந்த காலிப்பணியிடங்கள் 2.5 லட்சம்முழுமையாக நிரப்பப்படும் என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார் .

ஆட்சி பொறுப்பேற்று 4 வருடம் முடிந்துவிட்டது. ஐந்தாம் ஆண்டு அடி எடுத்து வைத்து விட்டனர். அரசு பணியிடங்கள் சுமார் 50 ஆயிரம் நிரப்பப்பட்டுள்ளதாக மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அரசு சார்ந்த பணியிடங்கள் சுமார் 28 ஆயிரம் பேர் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர். சுமார் 78 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக மானிய கோரிக்கையின் போது தெரிவித்தார்கள்.

ஆனால் நான்கு வருட காலமாக ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரம் ஆக உள்ளது. இப்படி பொறுப்பேற்றதிலிருந்து நான்கு ஆண்டு காலத்தில் அரசு காலி பணியிடங்களும் அரசு சார்ந்த கல்வி பணி காலி பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படவில்லை. வெளி ஆட்களை எடுத்து தற்போது நிரப்பி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் அப்படி செய்யப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியபடி காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்ப வேண்டும்.

அரசாங்கம் அவ்வப்போது பேட்டி தர வேண்டும்

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது ஆனால் பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் நிறைய உள்ளது இந்த காலி பணியிடங்களும் நிரப்ப வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உள்ளது திமுக அரசாங்கம் . முதலமைச்சர், அமைச்சர்கள் பேசியது எல்லாம் நேரலையில் வந்தது .ஆனால் எதிர்க்கட்சி அதாவது பிரதான எதிர்க்கட்சி நான் கேட்கின்ற கேள்விகளுக்கு நேரலையில் ஏதும் ஒளிபரப்புவது இல்லை.

நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பி இருந்தால் திமுக படுபாதாளத்துக்கு சென்று இருக்கும். கேள்வி கேட்டதையும் நேரலையில் செய்ய வேண்டும், பதிலையும் நேரலை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வப்போது பேட்டி கொடுத்தால் தான் சரியாக இருக்கும். அப்போது தான் மக்கள் திருப்தி அடைவார்கள்.

சேலம் மாவட்டத்திற்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் திமுகவினர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். சேலம் மாநகரம் வளர்ந்து வரும் மாநகரம் எங்கு எங்கு பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்களோ அங்கெல்லாம் பாலம் கட்டினோம். குடிநீர் தேவை பூர்த்தி செய்தோம், பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வந்தோம், மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம். விவசாயம் பயன்பாட்டுக்கு ஆயிரம் கோடியில் கால்நடை பூங்கா கொண்டு வந்தோம்.

இதைக் கூட முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. நூறு ஏரி திட்டத்தில் ஏரிக்கு தண்ணீர் நிரப்ப திட்டம் கொண்டு வந்தோம். இந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இவையெல்லாம் மக்களுக்கான திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் முடக்கி வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சேலம் மாவட்டத்திற்கு என்ன செய்தது திமுக?

சேலம் மாவட்டத்தில் திமுக என்ன சிறப்பான திட்டம் கொண்டு வந்தார்கள். எதுவுமே இல்லை. கூட்டு குடி நீர் திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம். இப்படி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகு என்ன பெரிய திட்டங்களை கொண்டு வந்தார்கள் 5 லட்சம் கோடி கடன் தான் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் தான். கடன் வாங்கி செய்வது சாதனை இல்லை, வருவாயை அதிகரித்து அதன் மூலம் சாதனை செய்ய வேண்டும். இந்த கடனை யார் கட்டுவது?,’’

என்று அப்போது எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.