‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
‘அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே கூறினார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். இந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? நான் தலைமை தாங்குகிறேன். நான் எடுப்பதுதான் முடிவு’

மக்களைக் காப்போம் தமிழ்கத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் ஒரு கட்டமாக இன்று சிதம்பரத்தில் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகளை, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். விவசாயிகள் கூறிய கருத்துகள், கோக்கைகளைப் பரிசீலித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ‘’ஏற்கனவே அம்மா அவர்கள் வருவாய்த் துறையில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதில் ஸ்டிக்கர் ஒட்டி 46 திட்டங்களகை் குறிப்பிட்டு முதல்வர் விளம்பரம் செய்கிறார். மக்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது, இதையெல்லாம் நான்காண்டுகளாக ஏன் சரி செய்யவில்லை..?
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் கிராம் கிராமமாகச் சென்று மக்களிடம் மனு வாங்கினார். ஆட்சி வந்ததும் தீர்ப்பேன் என்றார். ஏன் தீர்க்கவில்லை. இப்போது மீண்டும் மனு வாங்குகிறார் என்றால் மக்களுடைய பிரச்னைகள் இன்னமும் தீரவில்லை என்பதை முதல்வரே ஒப்புக்கொள்கிறாரா…? இன்னும் எட்டு மாதங்களில் என்ன பிரச்னைகளைத் தீர்க்க முடியும். 2026 தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த திட்டத்தைக் கொண்டு வருகிறார்
