Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Jun 19, 2024 01:36 PM IST

Edappadi Palaniswami : இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்! (கோப்புப்படம்)
Edappadi Palaniswami : கள்ளச்சாராயத்தால் 5 பேர் மரணம் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்! (கோப்புப்படம்)

"கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

"கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை

கள்ளக்குறிசி கருணாகுளம் பகுதியில் கன்னுகுட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பலமுறை இவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்த காரணத்திற்காக சிறை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் விலை  அதிகம்

தமிழக அரசு மதுபான கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால் கருணாகுளம் பகுதியை ஒட்டி உள்ள ஏராளமானோர் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை நேற்று இரவு  சிலர் வாங்கி குடித்துள்ளனர்.  இதில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிறு எரிச்சல், கண் பாதிப்பு,  தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

5 பேர் பலி

கள்ளக்குறிச்சி நகர் பகுதியைச் சேர்ந்த கருணாகுளம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தால் சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்த ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கள்ளச் சாராயம் விற்பனை செய்தவரை காவல் துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் மறுப்பு

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாரயத்தால் உயிரிழப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் ஷெகாவத் மறுப்பு தெரிவித்துள்ளர். உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு மதுப்பழக்கமே இல்லை என்றும், மற்ற இருவர் வயிற்று போக்கு ஏற்பட்ட நிலையில் இறந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9