’அந்த சாரை காப்பாற்றியது யார்?’ எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
”திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு”

’அந்த சாரை காப்பாற்றியது யார்?’ எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் “சாரை” காப்பாற்றியது யார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 90,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.