’அந்த சாரை காப்பாற்றியது யார்?’ எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அந்த சாரை காப்பாற்றியது யார்?’ எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

’அந்த சாரை காப்பாற்றியது யார்?’ எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Published Jun 02, 2025 12:11 PM IST

”திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு”

’அந்த சாரை காப்பாற்றியது யார்?’ எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
’அந்த சாரை காப்பாற்றியது யார்?’ எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 90,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

SIRஐ_காப்பாற்றியது_யார் ?

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம்.

அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?

#SIRஐ_காப்பாற்றியது_யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!