‘பரிதவிக்கும் பல்கலை.,கள்.. அல்லாடும் அரசு கல்லூரிகள்..’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
‘தேவையற்ற வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் சென்று இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் இந்த விளம்பர மாடல் அரசு, தமிழக இளைஞர்களின், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வித் துறையின் வழக்குகளை ஏன் முடிக்க முயலவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்’

‘பரிதவிக்கும் பல்கலை.,கள்.. அல்லாடும் அரசு கல்லூரிகள்..’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களின் நிர்வாக அவலங்கள் இருப்பதாகவும். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத அலங்கோல ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடும் பின்னடைவில் உயர்கல்வி
‘‘2021-ல் நிறைவேற்ற முடியாத 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்து, விளம்பர ஆட்சி நடத்தி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் கீழ் உள்ள உயர்கல்வித் துறையின் நிர்வாகத் திறமையின்மையால் பல்கலைக்கழகங்களும், அரசு கல்லூரிகளும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன.