‘பணியிடங்கள் இருந்தும் நிரப்பாமல் வஞ்சிக்காதீர்கள்’ முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘பணியிடங்கள் இருந்தும் நிரப்பாமல் வஞ்சிக்காதீர்கள்’ முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

‘பணியிடங்கள் இருந்தும் நிரப்பாமல் வஞ்சிக்காதீர்கள்’ முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 25, 2025 08:13 PM IST

கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், "அரசு" என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

‘பணியிடங்கள் இருந்தும் நிரப்பாமல் வஞ்சிக்காதீர்கள்’ முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
‘பணியிடங்கள் இருந்தும் நிரப்பாமல் வஞ்சிக்காதீர்கள்’ முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

‘‘தமிழ்நாடு அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பணியிடங்களுக்கான TNPSCGroup4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு. இந்த தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இது! ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் இளைஞர்கள் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிக்கையில் சொன்னது நினைவிருக்கிறதா திரு.ஸ்டாலின் அவர்களே?

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தகவல்
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தகவல்

VAO உள்ளிட்ட அரசுப்பணிகளில் சேர வேண்டும் என்பது பல ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களின் கனவு. பணியிடங்கள் இருந்தும் அதனை நிரப்பாமல் வஞ்சிப்பது, இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல்!

கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், "அரசு" என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக Group4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்,’’

என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.