போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சி.. 80 வயது மூதாட்டிக்கு பாலியல் கொடுமை.. இபிஎஸ் கண்டனம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சி.. 80 வயது மூதாட்டிக்கு பாலியல் கொடுமை.. இபிஎஸ் கண்டனம்

போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சி.. 80 வயது மூதாட்டிக்கு பாலியல் கொடுமை.. இபிஎஸ் கண்டனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Jun 17, 2025 02:42 PM IST

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம் என எடப்பாடி பழனிசாமி கடலூர் மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் உயிரிழப்பு.. ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்’: விளாசிய எடப்பாடி பழனிசாமி!
'நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் உயிரிழப்பு.. ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்’: விளாசிய எடப்பாடி பழனிசாமி!

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80 வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!

ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர்

மு.க. ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்.

இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் மூதாட்டியை அருகில் இருந்த சவுக்கு தோப்புக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மேலும் மூதாட்டி காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துக்கொண்டும் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து ரத்த காயங்களுடன் கிடந்த மூதாட்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவரை போலீசார் இன்று துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் சுந்தரவேல் பதுங்கி இருந்தபோது போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு சுந்தரவேல் தப்பி ஓட முயற்சித்துள்ளார். பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுட்டதில் சுந்தரவேல் காயமடைந்தார். காலில் குண்டு காயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சுந்தரவேல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கியதில் காயமடைந்த இரண்டு காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.