TN Assembly: கருப்பு சட்டையில் ஈபிஎஸ்.. வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்.. என்ன நடக்கிறது சட்டப்பேரவையில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: கருப்பு சட்டையில் ஈபிஎஸ்.. வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்.. என்ன நடக்கிறது சட்டப்பேரவையில்!

TN Assembly: கருப்பு சட்டையில் ஈபிஎஸ்.. வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்.. என்ன நடக்கிறது சட்டப்பேரவையில்!

Marimuthu M HT Tamil Published Apr 08, 2025 11:08 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 08, 2025 11:08 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருப்பு சட்டையில் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளை சட்டையில் ஓ பன்னீர்செல்வமும் சட்டப்பேரவை வந்தனர்

TN Assembly: கருப்பு சட்டையில் ஈபிஎஸ்.. வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்.. என்ன நடக்கிறது சட்டப்பேரவையில்!
TN Assembly: கருப்பு சட்டையில் ஈபிஎஸ்.. வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்.. என்ன நடக்கிறது சட்டப்பேரவையில்!

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை, பேரவைத் தலைவர் அப்பாவு பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கின்றனர். அதில் குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்திருந்தனர்.

பெண் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சேலை அணிந்து வந்திருந்தனர். குறிப்பாக, கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியுடன் கருத்துவேறுபாடு காரணமாக இருந்து வந்த அதிமுகவின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்தார்.

அடுத்தடுத்து அமர்ந்திருந்த செங்கோட்டையனும் ஓ.பன்னீர்செல்வமும்:

அப்போது செங்கோட்டையன் அமர்ந்திருந்த வரிசையில் ஓபிஎஸ்ஸும் அமர்ந்து இருந்தார். அவர் தனி அணியாக செயல்படுவதால் அவருக்கு எந்த அறிவிப்பும் அதிமுகவில் இருந்து செல்லவில்லை எனப் புரிந்துகொள்ளமுடிகிறது.

வெண்மைநிறச் சட்டையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள்:

இதனாலேயே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களான மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வெள்ளை நிறச் சட்டை அணிந்து வந்திருந்தனர். என்னதான், தனித் தனி அணியாக இருந்தாலும், அதிமுக உறுப்பினர்கள் அடிக்கும் ஜோக்குகளுக்கு, ஓ.பன்னீர் செல்வம் சிரித்த வண்ணம் இருந்தார். இதனால் சட்டப்பேரவையில் கருப்பு, வெள்ளை கலந்து சதுரங்க விளையாட்டுபோல் காட்சியளித்தது.

பின்னர் இதுதொடர்பாகப் பேசிய முதலமைச்சர் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தது மகிழ்ச்சி என்றும், நல்ல வேலை காவி உடை அணிந்து வரவில்லை என்றும் கமெண்ட் அடித்தார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஓ.பி.எஸ் அணியினரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் சபை தொடங்கிய சிறிது நேரத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகின.