’இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்’ தொடர் கொலை, கொள்ளை சம்பவத்தை சுட்டிக்கட்டி ஈபிஎஸ் ட்வீட்!
“இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி பயனில்லை. இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்”

’இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்’ தொடர் கொலை, கொள்ளை சம்பவத்தை சுட்டிக்கட்டி ஈபிஎஸ் ட்வீட்!
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொடர் கொலைகள் மற்றும் ஜாதி மோதல்கள் பதிவாகியுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.