’இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்’ தொடர் கொலை, கொள்ளை சம்பவத்தை சுட்டிக்கட்டி ஈபிஎஸ் ட்வீட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்’ தொடர் கொலை, கொள்ளை சம்பவத்தை சுட்டிக்கட்டி ஈபிஎஸ் ட்வீட்!

’இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்’ தொடர் கொலை, கொள்ளை சம்பவத்தை சுட்டிக்கட்டி ஈபிஎஸ் ட்வீட்!

Kathiravan V HT Tamil
Published May 06, 2025 02:38 PM IST

“இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி பயனில்லை. இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்”

’இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்’ தொடர் கொலை, கொள்ளை சம்பவத்தை சுட்டிக்கட்டி ஈபிஎஸ் ட்வீட்!
’இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்’ தொடர் கொலை, கொள்ளை சம்பவத்தை சுட்டிக்கட்டி ஈபிஎஸ் ட்வீட்!

"24 மணி நேரத்தில் தொடர் கொலைகள், ஜாதி மோதல்கள்"

எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் வலைதள பதிவில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான முக்கிய சம்பவங்களைப் பட்டியலிட்டு, ஸ்டாலின் ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்தினார். அவை:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா, மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே, கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில், கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தைத் தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில், இரு ஜாதி தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதுடன், பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; ஐந்து பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

"இன்றைய ஒரு நாளின் செய்திகளே, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு சாட்சி" என பழனிசாமி குறிப்பிட்டார்.

"சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை முதல்வர் புறக்கணிக்கிறார்"

எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, "எனது ஆட்சியில் பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை என்று சட்டப்பேரவையில் கூறியவர், இதையெல்லாம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது" என்று குற்றம்சாட்டினார். மேலும், "இது எதைப் பற்றியும் துளியும் அக்கறையின்றி, நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டதாக ஒரு வீடியோ பதிவு செய்ய ஸ்டாலின் வருவார்" என கிண்டலடித்தார். அவர், ஸ்டாலினை ஆங்கிலப் படமான The Dictator படத்தின் கதாநாயகனுக்கு ஒப்பிட்டு, அவரது ஆட்சி முறையை விமர்சித்தார்.

"குற்றவாளிகளை கைது செய்யுங்கள்"

திமுக அரசை நோக்கி, "குற்றவாளிகள் கைது என்று சொல்வீர்களே, அதையாவது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள்" என வலியுறுத்திய பழனிசாமி, "இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி பயனில்லை. இன்னும் ஒரு ஆண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்." என மக்களை கேட்டுக் கொண்டு உள்ளார். 

"2026-ல் அதிமுக ஆட்சி மீண்டும் வரும்"

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் "#ByeByeStalin என்று தீர்ப்பளித்து, மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பார்கள்" என நம்பிக்கை தெரிவித்த பழனிசாமி, "தமிழ்நாடு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்" என உறுதியளித்தார்.