'வெறும் 6 மாதத்தில்…! 450 கோடி! 4 படங்கள்! இட்லி கடை தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு! யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'வெறும் 6 மாதத்தில்…! 450 கோடி! 4 படங்கள்! இட்லி கடை தயாரிப்பாளர் வீட்டில் Ed ரெய்டு! யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்!

'வெறும் 6 மாதத்தில்…! 450 கோடி! 4 படங்கள்! இட்லி கடை தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு! யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்!

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 05:05 PM IST

”சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ (200 கோடி பட்ஜெட்), தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ (100 கோடி பட்ஜெட்), மற்றும் சிலம்பரசன் நடிக்கும் பெயரிடப்படாத படம் (150 கோடி பட்ஜெட்) ஆகிய மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது”

'வெறும் 6 மாதத்தில்…! 450 கோடி! 4 படங்கள்! இட்லி கடை தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு! யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்!
'வெறும் 6 மாதத்தில்…! 450 கோடி! 4 படங்கள்! இட்லி கடை தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு! யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்!

திருமணத்தால் பரபரப்பு

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு, அப்போது வரை பெரிதாக அறியப்படாத ஆகாஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதை வெளியுலகிற்கு உணர்த்தியது. திருமணத்திற்கு இவ்வளவு பிரபலங்கள் வருகை தந்தது அப்போது பலருக்கும் கேள்விகளை எழுப்பியிருந்தது.

450 கோடி முதலீடு

ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ (200 கோடி பட்ஜெட்), தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ (100 கோடி பட்ஜெட்), மற்றும் சிலம்பரசன் நடிக்கும் பெயரிடப்படாத படம் (150 கோடி பட்ஜெட்) ஆகிய மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது. மேலும், அதர்வா நடிக்கும் ‘இதய முரளி’ படத்திற்கும் ஒப்பந்தங்கள் முடிவடைந்து பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படங்களுக்கான பூஜைகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால், ‘இட்லி கடை’ உள்ளிட்ட படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய பெருந்தொகை முதலீடு எவ்வாறு சாத்தியமானது, பணப்பரிமாற்றத்தில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடங்கி உள்ளது.

பிரபல நடிகர்களுடன் தொடர்பு

இந்தப் படங்களில் சிவகார்த்திகேயன், தனுஷ், சிலம்பரசன், அதர்வா, ரவி மோகன், சுதா கங்காரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு புதிய தயாரிப்பாளரை இத்தகைய பிரபலங்கள் எவ்வாறு நம்பினர், இவரது முதலீட்டிற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அடிப்படையாக உள்ளன.

அடுத்தகட்ட நடவடிக்கை

இந்த சோதனையின் மூலம் பணப்பரிமாற்ற விவரங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது. முறைகேடுகள் கண்டறியப்பட்டால், படங்களில் நடித்த நடிகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைத்துறையில் இத்தகைய பெருந்தொகை முதலீடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் முடிவில், ஆகாஷ் பாஸ்கரனின் முதலீட்டு மூலாதாரம் மற்றும் பணப்பரிமாற்றத்தில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.