‘நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர் தான்’ ப்ளஸ் 2 மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
‘சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்’

‘நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர் தான்’ ப்ளஸ் 2 மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
தமிழக ப்ளஸ் 2 தேர்வு 2025 முடிகள் வெளியான நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.