School Holiday: ’கனமழை எதிரொலி! 7 மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பு!’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Holiday: ’கனமழை எதிரொலி! 7 மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பு!’

School Holiday: ’கனமழை எதிரொலி! 7 மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பு!’

Kathiravan V HT Tamil
Nov 04, 2023 06:37 AM IST

“மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு”

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்ச் லார்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதே வேளையில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை ஆகிய ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 8.30 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.