நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ’15 நாட்களுக்குள் திமுக கொடி கம்பங்களை அகற்றுங்கள்!’ பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ’15 நாட்களுக்குள் திமுக கொடி கம்பங்களை அகற்றுங்கள்!’ பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ’15 நாட்களுக்குள் திமுக கொடி கம்பங்களை அகற்றுங்கள்!’ பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு

Kathiravan V HT Tamil
Published Mar 19, 2025 01:16 PM IST

தேசிய நெடுஞ்சாலை,மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் -பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்களை 'மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ’15 நாட்களுக்குள் திமுக கொடி கம்பங்களை அகற்றுங்கள்!’ பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு
நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ’15 நாட்களுக்குள் திமுக கொடி கம்பங்களை அகற்றுங்கள்!’ பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு

நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்." என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க:- தங்கம் விலை நிலவரம்: ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

அகற்றிய கொடிக்கம்பம் குறித்து தலைமைக்கு கூறுக

எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி,பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை,மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் -பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்களை 'மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் - அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார். 

மேலும் படிக்க:- சட்டப்பேரவை: ’சென்னை, கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!’ அமைச்சர் கே.என்.நேரு பதில்

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கட்சி, சாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என தெளிவுபடுத்தியது. இந்த தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இதற்கு இணங்கி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.