"அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தெய்வச்செயல் விவகாரம்! திமுக அரசை விளாசும் ஈபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  "அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தெய்வச்செயல் விவகாரம்! திமுக அரசை விளாசும் ஈபிஎஸ்!

"அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தெய்வச்செயல் விவகாரம்! திமுக அரசை விளாசும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Published May 19, 2025 11:57 AM IST

அமைச்சர் அன்பில் மகேஷின் PA உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன். தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்”

 "அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தெய்வச்செயல் விவகாரம்! திமுக அரசை விளாசும் ஈபிஎஸ்!
"அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தெய்வச்செயல் விவகாரம்! திமுக அரசை விளாசும் ஈபிஎஸ்!

எம்.எல்.ஏவிடம் முறையிட்ட பிறகு FIR

மாணவியின் இந்த புகார் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் செய்து உள்ளார். அதில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது.

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி

மேலும், தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். "பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய திரு.மு.க.ஸ்டாலின்அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே? பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!

யார் அந்த தம்பி

பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக "உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை" அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஷின் PA உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன். தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த "டம்மி அப்பா" அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்! #யார்_அந்த_தம்பி என கூறி உள்ளார்.

மாணவி பேட்டி

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தெய்வசெயல் தனது வாழ்க்கையைச் சீரழித்துவிட்டதாகவும், உடலை நாசம் செய்து படிப்பைக் கெடுத்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். தன்னைப் போல் 15 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மன்றாடியுள்ளார். தன்னைத் தாக்கிய காயங்களைச் செய்தியாளர்களிடம் காண்பித்தும் அழுதார்.

தெய்வசெயல் தனது செயல்களை ஒப்புக்கொண்டு "ஆமாம் நான் தப்பு செய்தேன் தான். ரிமாண்ட் பண்ணுங்க" என்று சிரிப்பதாகவும், அவனது அனைத்து மிரட்டல்களுக்கும் ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் மாணவி கூறினார். மேலும், தனது போனை உடைத்துவிட்டதாகவும், கல்லூரிக்கே செல்லப் பயமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெய்வசெயல் திமுகவில் இருப்பதால், காவல்துறை தனக்குச் சாதகமாகச் செயல்படும் என்றும், தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறுவதாகவும் மாணவி புகார் கூறியுள்ளார்.