"அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தெய்வச்செயல் விவகாரம்! திமுக அரசை விளாசும் ஈபிஎஸ்!
அமைச்சர் அன்பில் மகேஷின் PA உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன். தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்”

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் தெய்வசெயல் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகக் கல்லூரி மாணவி ஒருவர் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். தனது புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பதாகக் கூறி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் அளித்து இருந்தார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
எம்.எல்.ஏவிடம் முறையிட்ட பிறகு FIR
மாணவியின் இந்த புகார் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் செய்து உள்ளார். அதில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது.