’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

Kathiravan V HT Tamil
Published May 17, 2025 04:59 PM IST

“தன்னைப் போல் 15 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மன்றாடியுள்ளார். தன்னைத் தாக்கிய காயங்களைச் செய்தியாளர்களிடம் காண்பித்தும் அழுதார்”

’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்
’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

புகாரின் விவரங்கள்

21 வயதாகும் பாதிக்கப்பட்ட மாணவி, அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல் (40) தன்னை காதலிப்பதாக ஏமாற்றி, ஏற்கனவே திருமணமாகியும் கடந்த ஜனவரி 31 அன்று சோளிங்கர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகத் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தனது பெற்றோரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியே தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் (மார்ச் மாதம் வரை) சுமூகமாகச் சென்ற நிலையில், திடீரென தெய்வசெயல் தன்னை திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு "இரையாக்க" முயற்சி செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தன்னை தினமும் கடுமையாகத் தாக்கியதாகவும், உடம்பெல்லாம் கடித்து துன்புறுத்தியதாகவும், காயங்கள் இருப்பதாகவும் மாணவி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

இக்கொடுமைகளால் மனமுடைந்து கடந்த ஏப்ரல் 5 அன்று தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், உறவினர்களால் மீட்கப்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னரும், தன்னை விட்டுச் செல்லவில்லை என்றால் பெற்றோர்களை வாகனத்தில் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி அழைத்துச் சென்றதாகவும், அங்கு தனக்கு கொடுமைகள் அரங்கேறியதாகவும் மாணவி கூறியுள்ளார். அங்கிருந்து தப்பித்து வந்து நிரந்தரமாகத் தாய் வீட்டில் தங்கி கல்லூரி படிப்பைத் தொடர்ந்து வரும்போதும், தெய்வசெயல் தன்னைத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார்.

காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் அலைக்கழிப்பு

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கச் சென்றபோது, ஆரம்பத்தில் அரக்கோணம் நகர காவல் நிலையம் இது தங்கள் எல்லை இல்லை எனத் திருப்பி அனுப்பியதாகவும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது ஆய்வாளர் இல்லாததால் தாலுகா காவல் நிலையம் செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும், அங்கும் அலைக்கழிக்கப்பட்டதாகவும் மாணவி வேதனை தெரிவித்துள்ளார். நேரடியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்றபோதும், புகார் மனு பெறப்பட்டு அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும் மாணவி குற்றம் சாட்டியுள்ளார். திமுக பின்புலம் கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்கொலை முயற்சி குறித்தும் காவல்துறையினர் எவ்வித விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் மாணவி குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேட்டி

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தெய்வசெயல் தனது வாழ்க்கையைச் சீரழித்துவிட்டதாகவும், உடலை நாசம் செய்து படிப்பைக் கெடுத்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். தன்னைப் போல் 15 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மன்றாடியுள்ளார். தன்னைத் தாக்கிய காயங்களைச் செய்தியாளர்களிடம் காண்பித்தும் அழுதார்.

தெய்வசெயல் தனது செயல்களை ஒப்புக்கொண்டு "ஆமாம் நான் தப்பு செய்தேன் தான். ரிமாண்ட் பண்ணுங்க" என்று சிரிப்பதாகவும், அவனது அனைத்து மிரட்டல்களுக்கும் ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் மாணவி கூறினார். மேலும், தனது போனை உடைத்துவிட்டதாகவும், கல்லூரிக்கே செல்லப் பயமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெய்வசெயல் திமுகவில் இருப்பதால், காவல்துறை தனக்குச் சாதகமாகச் செயல்படும் என்றும், தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறுவதாகவும் மாணவி புகார் கூறியுள்ளார்.