DMK Vs Annamalai: 'போதைப்பொருள் கடத்தலின் மையமான தமிழகம்' திமுக மீது குற்றம் சாட்டிய அண்ணாமலை
திமுக ஆட்சியில் போதைப்பொருளின் மையமான தமிழகம் மாறி உள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

திமுக ஆட்சியில் போதைப்பொருளின் மையமாக தமிழகம் மாறி உள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
அதில் கூறியதாவது, ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் பேசுவதற்காக இந்த வீடியோ பதிவு. கடந்த 10 நாட்களாக பல அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா, சிந்தடிக் டிரக்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பொதுவெளியில் சர்வ சாதாரணமாக எல்லா இடத்திலும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை எனது என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் போது நிறைய தாய்மார்கள் என்னிடம் புகாராக தெரிவித்தனர். பட்டி, தொட்டியெல்லாம் கிராமத்திலும் பரவிவிட்டது. இதனை பெரும் முயற்சி எடுத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கூறினர்.
திமுக அரசு காலத்தில் கடந்த 33 மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு டிரக்ஸ் புழக்கம் தமிழகத்தில் அதிகமாகிவிட்டது. கடந்த 10 நாட்களாக வந்த செய்தி நமக்கு ஒரு ஊர்ஜீதத்தை கொடுக்கிறது.