‘இரண்டு அயோக்கிய தற்குறிகள்.. அவன் பேரையெல்லாம் சொல்லி..’ திமுக மேடையில் முழங்கிய தமிழன் பிரசன்னா!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘இரண்டு அயோக்கிய தற்குறிகள்.. அவன் பேரையெல்லாம் சொல்லி..’ திமுக மேடையில் முழங்கிய தமிழன் பிரசன்னா!

‘இரண்டு அயோக்கிய தற்குறிகள்.. அவன் பேரையெல்லாம் சொல்லி..’ திமுக மேடையில் முழங்கிய தமிழன் பிரசன்னா!

HT Tamil HT Tamil
Dec 08, 2024 12:14 PM IST

‘அம்பேத்கரை திராவிட இயக்கங்கள் ஏன் மேடை ஏற்றவில்லை என்று அந்த அயோக்கிய தற்குறிகள் கேட்கிறார்கள். வார்த்தையை அடியாக கவனியுங்கள். நான் எவன் பெயரையும் குறிப்பிடவில்லை. அவன் பெயரையெல்லாம் சொல்லி, எங்கள் மேடையை கொச்சைப்படுத்தவும் நான் விரும்பவில்லை’

‘இரண்டு அயோக்கிய தற்குறிகள்.. அவன் பேரையெல்லாம் சொல்லி..’ திமுக மேடையில் முழங்கிய தமிழன் பிரசன்னா!
‘இரண்டு அயோக்கிய தற்குறிகள்.. அவன் பேரையெல்லாம் சொல்லி..’ திமுக மேடையில் முழங்கிய தமிழன் பிரசன்னா!

‘‘சேலம் ஓமலூரில் ஒரு நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த போது, எல்லாரும், ‘பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. அவர் பேச்சை பார்த்தீங்களா.. உங்களுக்கு கோபம் வரலையா? நீங்க எப்படி பேசாமல் இருக்கீங்க’ என்று கேட்டார்கள். நான் சொன்னேன், ‘நாளைக்கு ஒரு பொதுக் கூட்டம் இருக்கு, நான் அங்கு பதில் சொல்லிக் கொள்கிறேன்’ என்று கூறினேன். அதில் இரண்டு பேர் பேசியிருக்கிறார்கள். அந்த இரண்டு பேரும் யார் என்றால், தமிழ்நாட்டில் புதிதாக வந்திருக்கிற தற்குறிகள். புதிதாய் முளைத்திருக்கிற தற்குறிகள். அந்த தற்குறிகள் பேசிய ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டும் நான் பதிலளிக்கிறேன். 

அயோக்கிய தற்குறிகள் இருவர்

அம்பேத்கரை திராவிட இயக்கங்கள் ஏன் மேடை ஏற்றவில்லை என்று அந்த அயோக்கிய தற்குறிகள் கேட்கிறார்கள். வார்த்தையை அடியாக கவனியுங்கள். நான் எவன் பெயரையும் குறிப்பிடவில்லை. அவன் பெயரையெல்லாம் சொல்லி, எங்கள் மேடையை கொச்சைப்படுத்தவும் நான் விரும்பவில்லை. அந்த தற்குறிகளுக்குச் சொல்கிறேன், அம்பேத்கர் என்பவர் யார்? அவரை எந்த இடத்தில் அடையாளம் காட்டியது என்றால், வேறு எந்த மாநிலமும் அம்பேத்கரை தொட பயந்த போது, இந்தியா முழுவதுக்கும் முதல் முன்னுதாரணமாக, அம்பேத்கர் என்கிற பெயரை தமிழ்நாட்டில் வைத்தது திமுக, கருப்பு சிவப்பு, உதயசூரியன், டாக்டர் கலைஞர். யாருக்கிட்ட போய் அம்பேத்கர் பேரு? மேடை ஏத்தவில்லையாம்! 

தம்பி, நீங்களெல்லாம் இப்போது பெய்த மழையில் முளைத்த காளான்கள். இங்கே பெரிய அரசமரம், ஆலமரம் இருக்கிறது. 75 ஆண்டுகாலம் இந்த இயக்கம் தொடங்கி முடியப்பெற்றிருக்கிறது. 75 ஆண்டுகள் ஒரே சின்னம், ஒரே கொடி, ஒரே தலைவன், ஒரே சமூக நீதி என்கிற கொள்கையில் இன்றும் பயணித்துக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பேரியக்கம்.

தற்குறிகளுக்கு ஒரு செய்தி

இங்கு இருப்பவர்கள் உங்களைப் போல காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டமா? உயிர் முக்கியமா? உதய சூரியன் முக்கியமா? என்றால், உயிர் என் மயிருக்கு சமம், உதயசூரியன் தான் முக்கியம் என்கிற கூட்டம் இந்த கூட்டம்.  எங்களைப் பார்த்து நீங்கள், அம்பேத்கரை மேடை ஏற்றினீர்களா? அம்பேத்கர் என்றால், உங்களுக்கு என்னவென்று தெரியுமா? யாரிடத்தில் வந்து என்ன பேசுகிறீர்கள்?

அம்பேத்கர் போட்டோவை பூஜையில் அறையில் வைங்க

தற்குறிகளே.. உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன், இங்கே இருக்கிற பெண்கள், உங்கள் பூஜை அறையில் அம்பேத்கர் படத்தை வையுங்கள். இவன் ஏன் பூஜை அறையில் அம்பேத்கர் படத்தை வைக்கச் சொல்கிறான் என நினைக்கலாம். அம்பேத்கர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். இந்தியாவின் ரிசர்வ் பேங்கின் முதல் கவர்னர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர். இத்தனையும வைத்து ஒரு கட்டத்தில்,  பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னார். பத்திரிக்கையாளர்கள் பதறிப் போனார்கள்.

 ‘நான் கேவலமாக நினைக்கிறேன், இந்த பதவியை தக்க வைக்க’ என்று கூறினார். ஏன் என்று கேட்டனர். ‘பெண்கள் விடுதலைக்கு நான் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தேன், அது தோற்று போயிருக்கிறது, நான் அவமானப்பட்டு போயிருக்கிறேன். நான் சட்ட அமைச்சராக இருக்கும் போது, இந்த விடுதலை சிறகை இந்தியாவில் வாழும் இந்து பெண் சமூகத்திற்கு கொடுக்கவில்லை என்றால், எதற்கு இந்த பதவி?’ என்றார். 

அப்படி என்ன சட்டதிருத்தம், ‘கணவனை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து, குழந்தை பிறக்கவில்லை என்றால் தத்து எடுக்கலாம், இந்து பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வேண்டும்,’ என்று கூறியவர் அம்பேத்கர்,’’ என்று அந்த பொதுக்கூட்டத்தில் தமிழன் பிரசன்னா பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.