ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை! ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு கூட்டாக பேட்டி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை! ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு கூட்டாக பேட்டி

ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை! ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு கூட்டாக பேட்டி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 24, 2025 05:45 PM IST

ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவில் உறுப்பினர் சேர்க்க நடைபெற இருக்கிறது. பெரியார், அண்ணாவை பழித்த யாரும் தமிழ்நாட்டு அரசியலில் வெல்ல முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை! ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு கூட்டாக பேட்டி
ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை! ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு கூட்டாக பேட்டி

சுயமரியாதை உள்ளவர்கள் கண்டிக்கிறார்கள்

அப்போது ஆர்.எஸ். பாரதி கூறியதாவது, "எங்களை விட பொதுமக்களும், தமிழ்நாடும் கொதித்து போய் உள்ளார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் தமிழ்நாட்டில் இதுவரை அரசியலில் தலையெடுத்ததாக வரலாறே இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களை பழித்து பேசியதை திமுக மட்டுமல்ல, தமிழ் உணர்வு உள்ள அத்தனைபேரும், சுயமரியாதை உள்ள அத்தனைபேரும் கண்டித்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய வாக்குகளை, அவர்கள் ஒரே மாநாட்டில் சேர்த்துள்ளார்கள். அறநிலையத்துறை நீதிக்கட்சி காலத்தில் எதற்காக தொடங்கப்பட்டது என்ற வரலாற்றை சொன்னால் நேரம் போதாது" என்றார்.

ஓரணியில் தமிழ்நாடு

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலமைச்சர் பொதுக்குழுவில் அறிவித்தது போல் ஓரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம். ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்கள்.

அடுத்த நாள் முதல் மாவட்டங்களில் இருக்கும் அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பேரணியாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைப்பார்கள். ஜூலை 3ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் வாக்குசாவடி முகவர்கள், டிஜிட்டல் ஏஜெண்ட்ஸ், இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஒவ்வொரு பூத்களில் இருக்கும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கில் உள்ளோம்.

சாதனைகளை சொல்லி உறுப்பினர் சேர்க்கை

திமுக கழக்கத்தின் திட்டங்கள், சாதனைகளை எடுத்து சொல்லி டிஜிட்டல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் மூலமாகவும் சேர்க்கப்பட உள்ளோம். தமிழ்நாடு மக்கள் எந்தவொரு அரசியல் சூழ்நிலையிலும் மதத்தையோ, சாதிகளையோ ஆதரிக்காமல் ஓரணியில் திரள்வார்கள். இதை மனதில் வைத்து உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்குகிறோம்.

குறிப்பாக வட மொழிக்கு கொடுக்ககூடிய முக்கியத்துவமும், நிதி ஒதுக்கீடும் அதிகமாக உள்ளது. இது மீண்டும் ஒரு முறை உறுதியாகி இருக்கிறது. தமிழ் மொழிக்கு இந்த சிறப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தா் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்தை பெற்று தந்தார்.

செம்மொழி அந்தஸ்து பெற்ற மற்ற மொழிகளுக்கும் வடமொழிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் கிடைக்காமல் போய் இருப்பதில் இருந்தே ஏன் தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும் என்பதே என்னுடைய பதில்"

இவ்வாறு அவர் கூறினார்.