'ஓரணியில் தமிழ்நாடு'.. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பயிற்சி முகாம் தொடக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'ஓரணியில் தமிழ்நாடு'.. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பயிற்சி முகாம் தொடக்கம்!

'ஓரணியில் தமிழ்நாடு'.. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பயிற்சி முகாம் தொடக்கம்!

Karthikeyan S HT Tamil
Published Jun 25, 2025 11:18 AM IST

'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை திட்டத்திற்கான பயிற்சி முகாம் இன்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெறுகிறது.

'ஓரணியில் தமிழ்நாடு'.. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பயிற்சி முகாம் தொடக்கம்!
'ஓரணியில் தமிழ்நாடு'.. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் பயிற்சி முகாம் தொடக்கம்!

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,"முதலமைச்சர் பொதுக்குழுவில் அறிவித்தது போல் ஓரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம். ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்கள். அடுத்த நாள் முதல் மாவட்டங்களில் இருக்கும் அனைத்து இடங்களிலும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பேரணியாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைப்பார்கள்.

ஜூலை 3ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் வாக்குசாவடி முகவர்கள், டிஜிட்டல் ஏஜெண்ட்ஸ், இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஒவ்வொரு பூத்களில் இருக்கும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கில் உள்ளோம்.

திமுகவின் திட்டங்கள், சாதனைகளை எடுத்து சொல்லி டிஜிட்டல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் மூலமாகவும் சேர்க்கப்பட உள்ளோம். தமிழ்நாடு மக்கள் எந்தவொரு அரசியல் சூழ்நிலையிலும் மதத்தையோ, சாதிகளையோ ஆதரிக்காமல் ஓரணியில் திரள்வார்கள். இதை மனதில் வைத்து உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்குகிறோம்.

குறிப்பாக வட மொழிக்கு கொடுக்ககூடிய முக்கியத்துவமும், நிதி ஒதுக்கீடும் அதிகமாக உள்ளது. இது மீண்டும் ஒரு முறை உறுதியாகி இருக்கிறது. தமிழ் மொழிக்கு இந்த சிறப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தா் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்தை பெற்று தந்தார். செம்மொழி அந்தஸ்து பெற்ற மற்ற மொழிகளுக்கும் வடமொழிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் கிடைக்காமல் போய் இருப்பதில் இருந்தே ஏன் தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும் என்பதே என்னுடைய பதில்" என்று தெரிவித்திருந்தார்.