‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் தொடரபான விவாதத்தில் இன்று விவாதிக்கப்பட்ட முக்கிய கோரிக்கைளின் தொகுப்பு இதோ:

‘யார் அவ்வையார்?.. மலைக்கோயிலுக்கு ரோப்கார் இல்லை.. நயினாரின் நியாயமான கோரிக்கை..’ சட்டமன்றத்தின் இன்றைய விவாதங்கள்!
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று தொடர்ந்து வரும் நிலையில், உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள் இதோ:
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கொங்கு ஈஸ்வரின் வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘சம்மந்தப்பட்ட மலைக்கோயிலுக்கு இந்த ஆண்டே மாற்றுப்பாதை அமைக்கப்படும், ரோப்கார் வசதி சாத்தியமில்லை என்பதால், மாற்றுப் பாதை அமைக்க முடிவு செய்யப்படும்’’ என்று அமைச்சர் பதிலளித்தார்.
- முருங்கை இலை பவுடர் ஆலைகள் அமைக்கப்படுமா என்று நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘‘தமிழகம் முழுவதும் 31 தனியார் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை இலலையை பதப்படுத்தும் 2 தனியார் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே நிலக்கோட்டையில் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க திட்டம் இல்லை,’’ என்று அமைச்சர் பதிலளித்தார்.
மேலும் படிக்க | அப்பாவுக்கு எதிரான அதிமுக தீர்மானம்.. ஆதரவாக எழுந்த நின்ற துரைமுருகன், உதயநிதி - சட்டப்பேரவை எழுந்த சிரிப்பலை
