'4 மாநில காவல் துறையினர் தேடி வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்..’: தனிப்படை அமைத்து பிடித்த திண்டுக்கல் காவல் துறையினர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  '4 மாநில காவல் துறையினர் தேடி வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்..’: தனிப்படை அமைத்து பிடித்த திண்டுக்கல் காவல் துறையினர்!

'4 மாநில காவல் துறையினர் தேடி வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்..’: தனிப்படை அமைத்து பிடித்த திண்டுக்கல் காவல் துறையினர்!

Marimuthu M HT Tamil Published May 09, 2025 08:03 PM IST
Marimuthu M HT Tamil
Published May 09, 2025 08:03 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்ளை அடிப்பதற்காக திட்டம் தீட்டிய இந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் தாங்கள் திருடிய 4 சக்கர வாகனத்தில் திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரி அருகே வந்துள்ளனர். அந்த பகுதியில் காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

'4 மாநில காவல் துறையினர் தேடி வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்..’: தனிப்படை அமைத்து பிடித்த திண்டுக்கல் காவல் துறையினர்!
'4 மாநில காவல் துறையினர் தேடி வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்..’: தனிப்படை அமைத்து பிடித்த திண்டுக்கல் காவல் துறையினர்!

மேலும் இவர்கள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள் என்பதும் தெரிய வந்தது.

தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம். காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், வடமதுரை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வைர நெக்லஸ், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் திருடு போயின.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்து, திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் மற்றும் வடமதுரை காவல் நிலையங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில், நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.

4 சக்கர வாகனத்தில் சென்ற மங்கி குல்லா கொள்ளையர்கள்:

இந்த நிலையில் மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்ளை அடிப்பதற்காக திட்டம் தீட்டிய இந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் தாங்கள் திருடிய 4 சக்கர வாகனத்தில் திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரி அருகே வந்துள்ளனர். அந்த பகுதியில் காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஷிப்ட் டிசையர் காரில் வந்த கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தன்ராஜ் (எ) தேவ் (வயது 28), மற்றும் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் (வயது 24), திருப்பத்தூர் பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் சுதாகர் (வயது 45) ஆகியோரை விசாரணை செய்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளைச் சம்பவம்:

விசாரணையில் அவர்கள் திருட்டு காரில் வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர். அவர்கள் திருடிய வெள்ளிக் குத்துவிளக்கு, வைர நெக்லஸ், ரூ.40 பணம், செல்போன்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார் மற்றும் மங்கி குல்லா, கையுறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 இடங்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இவர்களை 4 மாநில காவல் துறையினர் 2 வருடங்களாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.