அதிகனமழை எச்சரிக்கை எதிரொலி! கோவை வெள்ளியங்கிரி மலையேற தடை விதிப்பு!
”கனமழை மற்றும் அதன் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, வனத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது”

அதிகனமழை எச்சரிக்கை எதிரொலி! கோவை வெள்ளியங்கிரி மலையேற தடை விதிப்பு!
கோவை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதால் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
