கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா.. சிவகங்கையில் ஆய்வு பணியின் போது உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு பணிகளை செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னோடியுமான சாத்தையாவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். அத்துடன் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது திமுகவின் மூத்த உறுப்பினரும், நிர்வாகியுமான சாத்தையா என்பவரை நேரில் சென்று சந்தித்ததார் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பதிவை புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
கழக முன்னோடிகளில் முக்கியமானவர்
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில்,
சிவகங்கை மாவட்ட கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர். கழகத்தலைவர் ஸ்டாலின் மீது பற்று கொண்டவர். சிவகங்கை நகர்மன்ற தலைவர், மாவட்டக்கழக அவைத்தலைவர், நகரக்கழகச் செயலாளர், கழக தலைமை செயற்குழு உறுப்பினர் என மக்கள் பணி மற்றும் கழகப்பணி இரண்டிலும் திறம்பட செயல்பட்டவர்.\