‘மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
”அவரை உடனடியாக மதுரை ஆதினம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென விரைவில் இந்துமக்கள்கட்சி பட்டின் பேரில் அனைத்து இந்து அமைப்புகளையும், சைவ ஆதினங்களையும் ஒன்றிணைத்து ஆலோசணை கூட்டம் நடைபெறும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தெரியபடுத்தி கொள்கின்றோம்”

‘மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மதுரை ஆதீனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கார் விபத்து தொடர்பாக அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள், மதுரை ஆதீன மடத்தின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடப்பதாகவும் குற்றம்சாட்டி, இந்து மக்கள் கட்சி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. 293-வது மதுரை ஆதீனமான திருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், மடத்தின் மரபுகளை மீறி தான்தோன்றித்தனமாக செயல்படுவதாகவும் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.