ஆளுநர் பதவி வேணாம்னு சொல்லிட்டு அவரிடமே மனு அளிப்பதா? விஜய் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆளுநர் பதவி வேணாம்னு சொல்லிட்டு அவரிடமே மனு அளிப்பதா? விஜய் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஆளுநர் பதவி வேணாம்னு சொல்லிட்டு அவரிடமே மனு அளிப்பதா? விஜய் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Kathiravan V HT Tamil
Dec 30, 2024 04:12 PM IST

ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை செய்வது வழக்கம். தற்போது ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல் என விசிக விமர்சனம்.

ஆளுநர் பதவி வேணாம்னு சொல்லிட்டு அவரிடமே மனு அளிப்பதா? விஜய் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ஆளுநர் பதவி வேணாம்னு சொல்லிட்டு அவரிடமே மனு அளிப்பதா? விஜய் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகலில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து 3 பக்க மனு அளித்தார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளுநர் பதவியை நீக்க கோறும் தவெக

தவெக தலைவர் விஜயின் இந்த செயல் தமிழக அரசியலில் பேசு பொருள் ஆகி உள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையை அறிவித்த விஜய், ஆளுநர் பதவியை அகற்ற தவெக வலியுறுத்தும் என கூறி இருந்தார்.

ஆளுநர் பதவியை நீக்க கோறும் தவெக
ஆளுநர் பதவியை நீக்க கோறும் தவெக

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பில், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் மீது விசிக விமர்சனம்

ஆளுநர் ரவியை விஜய் சந்தித்து மனு அளித்துள்ளது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனங்களை முன் வைத்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிவிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், ”ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல் என அவர் விமர்சித்து உள்ளார். 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.