Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்! பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே பழி சொல்வதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றுக!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்! பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே பழி சொல்வதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றுக!

Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்! பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே பழி சொல்வதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றுக!

Kathiravan V HT Tamil
Jan 24, 2025 04:40 PM IST

"ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை"

Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்! பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே பழி சொல்வதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றுக!
Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்! பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே பழி சொல்வதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றுக!

எந்த வகையிலும் ஏற்க முடியாது

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. 

பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சொல்வதா?

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது என தெரிவித்து உள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.