சிலைக்கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சிலைக்கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!

சிலைக்கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!

Kathiravan V HT Tamil
Published May 05, 2025 12:13 PM IST

சி.பி.ஐ. தரப்பு, பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதாலும், சி.பி.ஐ. குறித்து தரக்குறைவாக பேசுவதாலும் விசாரணையில் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டது

சிலைக்கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!
சிலைக்கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பாஸ்போட்டை ஒப்படைக்க உத்தரவு!

சிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தரப்பு, பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதாலும், சி.பி.ஐ. குறித்து தரக்குறைவாக பேசுவதாலும் விசாரணையில் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டது.

இதனை ஏற்று, நீதிபதிகள் பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும், நான்கு வாரங்களுக்குள் இவ்விவகாரம் தொடர்பாக விரிவான எழுத்துப்பூர்வ பதிலை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.