சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் சதி! ரயிலை கவிழ்க்க முயற்சி! மர்ம நபர்கள் யார்?
சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் செல்லும் பாதையில் ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. தண்டவாளத்தில் உள்ள போல்ட் மர்ம நபர்களால் கழட்டப்பட்டுள்ளது. இது ரயில்வே துறை மற்றும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது போன்ற அசாதாரண சூழ்நிலையில் மீண்டும் ஒரு நிகழ்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அது தான் சென்னை - அரக்கோணம் ரயில்பாதையில் மர்ம நபர்கள் சிலர் தண்டவாளத்தின் போல்டினை கழட்டி சென்றுள்ளனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் வரும் ரயிலை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரயில்வே ஊழியர்களின் துரித செயல்
சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு அதி விரைவு ரயில்கள் செல்லக் கூடிய தண்டவாளத்தில் சரியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த ரயில்வே தண்டவாளத்தின் போல்டினை காணவில்லை. ரயில்கள் பிரிந்து செல்லக் கூடிய முக்கிய இணைப்புப் பகுதியில் இருந்த இரண்டு இரும்பு நெட் போல்டுகளை மர்ம நபர்கள் கழட்டியுள்ளனர். இரவில் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் சிக்னல் பிரிவில் வேலை செய்யும் ரயில்வே ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொது இதனை கண்டுபிடித்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் கொடுத்த தகவலை அடுத்து சுமார் 50 ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தனர். அவர்களுடன் அரக்கோணம் ரயில்வே உயரதிகாரிகளும் உடன் இருந்தனர்.
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் காலை ரயிலை கவிழ்க்கவே இந்த சதி முயற்சி நடந்துள்ளதா என ரயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். தகவலை கொடுத்த சிக்னல் பணியில் இருந்த ஊழியர்களிடமும் அவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றார்.
ஒருவேளை சிக்னல் ஊழியர்கள் சரியான நேரத்தில் தகவல் அளிக்காமல் இருந்திருந்தால் அரக்கோணம் ரயில் கவிழ்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் எனவே இதன் மூலம் ஒரு மிகப்பெரிய சிறை தடுக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை எந்த நோக்கத்திற்காக மர்ம நபர்கள் என்னமோ கோணத்தில் விசாரித்து வருகின்றார். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் சேகரித்து பார்த்து வருகின்றனர்.

டாபிக்ஸ்