சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் சதி! ரயிலை கவிழ்க்க முயற்சி! மர்ம நபர்கள் யார்?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் சதி! ரயிலை கவிழ்க்க முயற்சி! மர்ம நபர்கள் யார்?

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் சதி! ரயிலை கவிழ்க்க முயற்சி! மர்ம நபர்கள் யார்?

Suguna Devi P HT Tamil
Published Apr 25, 2025 03:38 PM IST

சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் செல்லும் பாதையில் ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. தண்டவாளத்தில் உள்ள போல்ட் மர்ம நபர்களால் கழட்டப்பட்டுள்ளது. இது ரயில்வே துறை மற்றும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் சதி! ரயிலை கவிழ்க்க முயற்சி! மர்ம நபர்கள் யார்?
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் சதி! ரயிலை கவிழ்க்க முயற்சி! மர்ம நபர்கள் யார்?

ரயில்வே ஊழியர்களின் துரித செயல்

சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு அதி விரைவு ரயில்கள் செல்லக் கூடிய தண்டவாளத்தில் சரியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே அரிச்சந்திராபுரம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த ரயில்வே தண்டவாளத்தின் போல்டினை காணவில்லை. ரயில்கள் பிரிந்து செல்லக் கூடிய முக்கிய இணைப்புப் பகுதியில் இருந்த இரண்டு இரும்பு நெட் போல்டுகளை மர்ம நபர்கள் கழட்டியுள்ளனர். இரவில் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் சிக்னல் பிரிவில் வேலை செய்யும் ரயில்வே ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொது இதனை கண்டுபிடித்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் கொடுத்த தகவலை அடுத்து சுமார் 50 ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தனர். அவர்களுடன் அரக்கோணம் ரயில்வே உயரதிகாரிகளும் உடன் இருந்தனர்.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் காலை ரயிலை கவிழ்க்கவே இந்த சதி முயற்சி நடந்துள்ளதா என ரயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். தகவலை கொடுத்த சிக்னல் பணியில் இருந்த ஊழியர்களிடமும் அவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றார்.

ஒருவேளை சிக்னல் ஊழியர்கள் சரியான நேரத்தில் தகவல் அளிக்காமல் இருந்திருந்தால் அரக்கோணம் ரயில் கவிழ்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் எனவே இதன் மூலம் ஒரு மிகப்பெரிய சிறை தடுக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை எந்த நோக்கத்திற்காக மர்ம நபர்கள் என்னமோ கோணத்தில் விசாரித்து வருகின்றார். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் சேகரித்து பார்த்து வருகின்றனர்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.