TNCC headquarters: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அடிதடி - போலீஸ் குவிப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ளது. இந்நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை மாற்றக்கோரி 300-க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
மோதலை அடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் உருட்டைக் கட்டையால் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த ஜோஸ்வா ராபர்ட், டேனியல் உட்பட 3 நபர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
டாபிக்ஸ்