ரவுடி வெள்ளைக்காளியை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் முயற்சி.. மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!
மதுரையில் கிளாமர்காளி கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி வெள்ளைக்காளியை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் சமீபத்தில் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டார். இந்த நிலையில், கிளாமர்காளி கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி வெள்ளைக்காளியை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சிறைக் கைதிகள் உரிமை மையம் சார்பில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவை பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: காளிமுத்து என்ற வெள்ளைக்காளி கடந்த 4 ஆண்டுகளாக தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். அவர் தற்போது அவர் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22.03.2025 அன்று மதுரையைச் சேந்த கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் என்பவர் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கிற்கும் காளிமுத்து என்ற வெள்ளைக்காளிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
