பல்லடம் மாணவி மரணத்தில் தீடீர் திருப்பம்.. மரணம் அல்ல.. அண்ணன் வெறிச்செயல்.. இரும்பு கம்பியால் அடித்து கொலை!
திருப்பூர் அருகே கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காதலை கைவிடாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக மாணவியின் அண்ணன் போலீசில் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் மாணவி மரணத்தில் தீடீர் திருப்பம்.. மரணம் அல்ல.. அண்ணன் வெறிச்செயல்.. இரும்பு கம்பியால் அடித்து கொலை!
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் வித்யா (22). இவா் கோவை அரசுக் கல்லூரியில் பயின்று வந்தாா். இந்நிலையில், மாா்ச் 30-ஆம் தேதி வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து பாா்த்தபோது, பீரோ மேலே சரிந்து ரத்த வெள்ளத்தில் வித்யா உயிரிழந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வித்யா திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் வித்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
