தரமற்ற கட்டுமான பொருட்கள்- மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தரமற்ற கட்டுமான பொருட்கள்- மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு

தரமற்ற கட்டுமான பொருட்கள்- மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு

Aarthi V HT Tamil Published Apr 13, 2023 03:39 PM IST
Aarthi V HT Tamil
Published Apr 13, 2023 03:39 PM IST

கல்குறிச்சி அரசு பள்ளியில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சமுக வலைதளங்களில் கிராம மக்கள் பதிவிட்டு இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தை இடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

கல்குறிச்சி
கல்குறிச்சி

ஆங்கில வழி கல்வியும் அப்பள்ளியில் உண்டு. எனவே மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளன. இட நெருக்கடி இருப்பதால் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் காரணமாக மானாமதுரை திமுக எம் எல் ஏ. தமிழரசியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. 

19 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கற்கள், சிமெண்ட். எம் சாண்ட் உள்ளிட்டவைகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும் செங்கற்கள் சாதாரணமாக உதிர்வதாகவும், தண்ணீர் பட்ட உடன் கரைவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். 

இதனையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட பகுதியை இடித்து அகற்றி விட்டு தரமான பொருட்களுடன் கட்ட உத்தரவிட்டடார். இதனையடுத்து கட்டப்பட்டது இடித்து அகற்றப்பட்டது. புதிய பொருட்களுடன் பள்ளி கட்டிட பணிகள் நடந்து வருகின்றன. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.